Skip to main content

Featured

இஸ்ரேலில் சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இந்தியா திரும்புகிறார்

பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேலில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

39வது ‘ஹய்ஃபா இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல்’ (Haifa International Film Festival) இஸ்ரேலில் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேல் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts