Skip to main content

Featured

சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் 30 நிமிட வாக்குமூலம் வீடியோவாக பதிவு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் 30 நிமிடங்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரைத் துறை மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts