
சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ‘80-ஸ் பில்டப்’ வரும் 24-ல் வெளியாகிறது. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கிற இந்த காமெடி படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். கடைசிக் கட்டப் பரப்பரப்பில் இருந்த இதன்இயக்குநர் கல்யாணிடம் பேசினோம். இவர் ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கியவர்.
‘80-ஸ் பில்டப்’ என்கிற தலைப்பு ஏன்? ஏதாவது புதுமையா பண்ணலாம்னு யோசிக்கும்போது, முழுக்கதையும் எண்பதுகள்ல நடக்கிற மாதிரி பண்ணினா எப்படியிருக்கும்னு தோணுச்சு. பொதுவா படங்கள்ல பிளாஷ்பேக் காட்சியை, அந்தகாலகட்டத்துல நடக்கிற மாதிரி காண்பிச்சிருப்பாங்க. ஆனா முழு கதையையும் அந்தக் காலகட்டத்துல நடக்கிற மாதிரி பண்ணினாஎன்ன? அப்படின்னு உருவாக்குன படம்தான் ‘80-ஸ் பில்டப்’.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment