
இதிகாசக் கதையான சத்யவான் சாவித்திரியின் நவீன வடிவம்தான் ‘டாக்டர் சாவித்திரி’.மருத்துவர் சாவித்திரி (அஞ்சலி தேவி) ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பவர். அவர் கணவர் சோமசுந்தரம் (பி.ஆர்.பந்துலு) வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கிரிமினல் வழக்கறிஞரான நாகலிங்கம் (டி.பாலசுப்பிரமணியம்), தனது நண்பர் மகள் வனஜாவை (எம்.என்.ராஜம்), மனைவியாக்கி சொத்துகளை அடைய நினைக்கிறார். டாக்டரான ஜெகத் சிங் (எஸ்.பாலசந்தர்) மனநல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் நாகலிங்கம் கொல்லப்பட, கொலைப்பழி மருத்துவர் சாவித்திரியின் கணவர் மீது விழுகிறது. அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கிறது. நவீன கால சாவித்திரி, துப்பறிபவராக மாறி, உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தனது கணவரை எப்படி மீட்கிறார் என்பது என்பது படம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment