Skip to main content

Featured

சமூக வலைதளங்களில் இருந்து ‘பிரேக்’ - ‘லியோ’ வெற்றி விழாவுக்குப் பிறகு ரத்னகுமார் அறிவிப்பு

சென்னை: ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று நடந்துமுடிந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களிலில் இருந்து ‘பிரேக்’ எடுத்துக் கொள்வதாக இயக்குநரும், ‘லியோ’ படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.01) நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் 'பிக் பாஸ்' ஜனனி, படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts