Featured
- Get link
- X
- Other Apps
நால்வர்: ஏ.பி.நாகராஜன் அறிமுகமான திரைப்படம்

இயக்குநர், நடிகர், கதை, வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்ட ஏ.பி.நாகராஜன், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தனது, பழனி கதிரவன் நாடகசபா மூலம் இவர் நடத்திய நாடகம்,‘நால்வர்’. இதற்கு அதிக வரவேற்புக் கிடைத்ததும் அதைத் திரைப்படமாக்க முன் வந்தார், தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. அந்தக் கதையில் சினிமாவுக்காக சிறுசிறு மாற்றங்கள் செய்து, கதை, திரைக்கதை, வசனம்எழுதிய நாகராஜன், அதில், கதாநாயகனாகவும் அறிமுகமானார். படத்தை வி.கிருஷ்ணன் இயக்கினார்.
கதைப்படி, மில்லில் பணியாற்றும் தந்தைக்கு நான்கு மகன்கள். மூத்த மகன் நேர்மையான காவல்துறை அதிகாரி (நாகராஜன்), அடுத்த மகன்வழக்கறிஞர், மூன்றாவது மகன், தனது தந்தை பணிபுரியும் மில்லில்மேற்பார்வையாளர் (எம்.என்.கிருஷ்ணன்). கடைசி மகன் சுயமரியாதையும், பகுத்தறிவு வாதமும் பேசுபவன். ஒரு கட்டத்தில் தந்தை மீது புகார் வருகிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியான மகன் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment