Skip to main content

Featured

அமீர் vs ஞானவேல்ராஜா பிரச்சினை - மவுனம் கலைப்பார்களா சூர்யா, கார்த்தி?

இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சினைதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். அமீருக்கு ஆதரவாக சிலரும், ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக சிலரும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts