Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இளைப்பாருங்கள் கேப்டன்” - பாடகர் ஆண்டனி தாசன் இசை அஞ்சலி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகர் ஆண்டனி தாசன் உருக்கமாக பாடல் பாடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1988-ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் ‘இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்’ பாடலை பாடி தனது அஞ்சலியை அவர் செலுத்தியுள்ளார். “எல்லாருடைய உள்ளத்திலும் நீங்க எப்போதும் வாழ்ந்துகிட்டு இருப்பீங்க. நீங்கள் நிம்மதியா இளைப்பாருங்கள் கேப்டன்” என அவர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments