Featured
- Get link
- X
- Other Apps
திரை விமர்சனம்: கண்ணகி

பொள்ளாச்சியில் வசிக்கும் கலைக்கு (அம்மு அபிராமி) வரும் வரன்களை அவள் அம்மா சரளா (மவுனிகா) ஏதேனும் காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். கோயம்புத்தூரில் வசிக்கும் நேத்ராவால் (வித்யா பிரதீப்) குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்னும் பொய்யான குற்றச்சாட்டில் அவர் கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்கொள்ள, இளம் வழக்கறிஞர் (வெற்றி எம்) உதவுகிறார். பெங்களூருவில் பணியாற்றும் நதி (ஷாலின் ஸோயா) திருமணம் செய்துகொள்ளாமல் சுதந்திரமாக வாழ விரும்புகிறார். ஆனால் அவருடன் லிவ்-இன் உறவில் இருக்கும் அபிரூபன் (அதேஷ் சுதாகர்) திருமணத்துக்கு வற்புறுத்துகிறார். சென்னையில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் கீதா (கீர்த்தி பாண்டியன்). அவரும் உதவி இயக்குநராக இருக்கும் அவர் துணைவர் யஷ்வந்தும் அந்தக் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். கலை, நேத்ரா, நதி, கீதா ஆகிய 4 பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன? இவர்களுக்கிடையிலான தொடர்பு என்ன? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.
சமூக- பொருளாதார நிலை, வசிப்பிடம், வயது என வெவ்வேறு பின்னணி கொண்ட 4 கதாபாத்திரங்களை முன்வைத்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். பெண்களின் அசலானப் பிரச்சினைகள் குறித்து முற்போக்குப் பார்வையுடனும் அக்கறையுடனும் சரியான புரிதலுடனும் காட்சிகளை அமைத்து பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Olivia Cheng of Dauphinette Wins Second Annual CFDA/Genesis House AAPI Design + Innovation Grant
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment