Featured
- Get link
- X
- Other Apps
திரை விமர்சனம்: சிங்கப்பூர் சலூன்

தென்காசியில் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற கடை வைத்திருக்கும் சாச்சாவைப் (லால்) பார்த்து தானும் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் கதிர் (ஆர்ஜே பாலாஜி). படித்து முடித்த பிறகு தன் லட்சியத்தை அடைய மாமனாரின் (சத்யராஜ்) பணத்தைப் பெற்றும் கடனை வாங்கியும் சென்னையில் சலூன் கடைத் திறக்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பத்தால் கடையைத் திறக்க முடியாமல் போகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முடிவெடுக்கும் பாலாஜி, பிறகு அதிலிருந்து மீண்டு, எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் கதை.
தென்காசியிலிருந்து தொடங்கும் கதையில் முதல் பாதி கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வது படத்துக்கு பிளஸ். சிறு வயதில் ஹேர் ஸ்டைலிஸ்டாக வேண்டும் என்கிற ஆசை பாலாஜிக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்காகக் குறிப்பிட்ட நேரத்தையும் எடுத்துக் கொள்கிறார் இயக்குநர் கோகுல். அந்தப் பருவத்துக் கதையைச் சுவையாகவும் வழங்கியிருக்கிறார். ஹேர் ஸ்டைலிஸ்ட் வேலையை, குறிப்பிட்டவர்கள்தான் செய்ய வேண்டும் என்றல்ல; யாரும் செய்யலாம் என்கிற சமூக ரீதியிலான கருத்தையும் கச்சிதமாக இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment