Skip to main content

Featured

திரை விமர்சனம்: மறக்குமா நெஞ்சம்

பிளஸ் டூ படிக்கும்போது சக மாணவி பிரியதர்ஷினியை (மெலினா) காதலித்த கார்த்திக் (ரக்‌ஷன்), தனது காதலைச் சொல்லாமலேயே ‘இதயம்’ முரளியைப் போல இருந்துவிடுகிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. இம்முறையாவது கார்த்திக் தனது காதலைச் சொன்னாரா, இல்லையா என்பது கதை.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொள்ளும் ‘ரீயூனியன்’ கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்டகத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், ஒரு பள்ளியில், ஒரே வகுப்பில் படித்த மாணவ, மாணவியர், பள்ளிக்கு 3 மாதம் வந்து, பிளஸ் டூ பாடங்களைப் படித்து மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுவதாக அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதைக்கு ஊக்கம் அளித்திருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts