Skip to main content

Featured

இயக்குநர் குமார் சஹானி காலமானார்

கொல்கத்தா: பிரபல இந்தி பட இயக்குநரும் புதிய அலை சினிமா முன்னோடியுமான குமார் சஹானி காலமானார். அவருக்கு வயது 83.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள,லர்கானாவில் பிறந்தவர் குமார் சஹானி. பிரிவினைக்குப் பிறகு அவர் குடும்பம் மும்பை வந்தது.புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த குமார்சஹானி, 'மாயா தர்பன்' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். 1972-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தேசிய விருதைப் பெற்றது. 12 வருடங்களுக்குப் பிறகு 'தாரங்' என்ற அடுத்த படத்தை இயக்கினார். இதுவும் தேசிய விருதைப் பெற்றது. அடுத்து, காயல்கதா, கஸ்பா, சார் அத்யாய் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படங்கள் இத்தாலியின் பியர் பாவ்லோ பசோலினி, ரஷ்யாவின் ஆண்ட்ரீ தர்கோவ்ஸ்கியுடன் ஒப்பிடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts