Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிங்கப்பூரில் வேட்டி கட்டி நடித்த தமிழ் நடிகர் நான்தான்: ராமராஜன் பெருமிதம்

சென்னை: ராமராஜன், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம், ‘சாமானியன்’. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ளார்.நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், மைம் கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, இசை அமைத்துள்ளார். ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் ராமராஜன் பேசியதாவது: இந்த 23 வருடங்களிலும் ராமராஜனை நினைவு வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இளையராஜாவும் ஒரு காரணம். அவரது பாடல்கள்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்’ 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு, 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இதில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இதில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை என்றேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments