Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

படப்பிடிப்பில் நடிகர் ஏகன் காயம்

சென்னை: கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'ஜோ' படத்தில், ரியோ ராஜின் நண்பராக நடித்து பாராட்டு பெற்றவர் ஏகன். இவர், சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கின்றனர். யோகி பாபு, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நடிப்பது குறித்து ஏகன் கூறும்போது, “சில படங்களில் நாயகனுக்கு நண்பராக நடித்தேன். இந்தப் படம் மூலம் நாயகனாகி இருக்கிறேன். இதில் யோகி பாபு உள்ளிட்டவர்களுடன் நடித்தது வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. இதன் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது அறுவைச் சிகிச்சை வரை செல்லும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது குணமடைந்துவிட்டேன். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments