Featured
- Get link
- X
- Other Apps
மாற்றுத் திறனாளிகளுக்காக படம் எடுக்கிறார் ராகவா லாரன்ஸ்

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய, மல்லர் கம்பம் சாகசக் கலையில் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். நடிகர் ராகவா லாரன்ஸின், ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு இதை இப்போது கற்றுள்ளது. இவர்கள் பங்கேற்ற சாகச நிகழ்வு, பத்திரிகையாளர்கள் முன் நடத்தப்பட்டது.
பின்னர், நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுதான். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், இவர்களை ஆட வைப்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ கற்றுக்கொள்கிறோம் என்றார்கள். அது, வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா ? எனக் கேட்டேன். முடியும் என்றார்கள். கற்றுக்கொண்டார்கள். இங்கு அவர்கள் செய்வதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment