Skip to main content

Featured

மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். 2015-ம் ஆண்டு வெளியாகி இந்தியளவில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘பிரேமம்’. இதற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘கோல்ட்’ படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பல்வேறு நடிகர்களிடம் அடுத்த படத்துக்கான கதைகள் கூறிவந்தார் அல்போன்ஸ் புத்திரன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுவயதில் வசித்த வீட்டை வாங்க நடிகர் அக்‌ஷய் குமார் ஆசை

மும்பை: பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருந்தார். இப்போது,டைகர் ஷெராஃப், பிருத்விராஜுடன் ‘படே மியான் சோட்டே மியான்’ என்றபடத்தில் நடித்துள்ளார். இது, வரும்10-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அக்‌ஷய் குமார் அளித்துள்ள பேட்டியில் சிறுவயதில் தான் வாடகைக்கு வசித்த வீட்டை வாங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "நான் சிறுவனாக இருந்தபோது வசித்த வீட்டை அவ்வப்போது பார்த்து வருவேன். 2 படுக்கை அறை கொண்ட அந்த வீட்டுக்கு ரூ.500 வாடகை கொடுத்துவந்தோம். அப்பா, காலையில் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் திரும்புவார். என் சகோதரி அவர் வருகைக்காகக் காத்திருப்பதும் என் கண்ணுக்குள் இருக்கிறது.அங்கு கொய்யா மரங்கள் இருக்கும். அந்த குடியிருப்பின்மூன்றாவது மாடியை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments