Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அருண் விஜய்க்கு வில்லனாகும் கன்னட நடிகர்

சென்னை: நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சித்தி இட்னானி, தான்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசை அமைக்கிறார். இதில் பிரபல கன்னட நடிகர் யோகி வில்லனாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து யோகி கூறும்போது, கன்னடத்தில் நான் நடித்த ஹெட் புஷ் படத்தைப் பார்த்து அருண் விஜய் படத்தில் நடிக்க அழைத்தார்கள். எனக்கு கதை பிடித்திருந்தது. உடனே சம்மதித்தேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments