Skip to main content

Featured

திரை விமர்சனம்: அரண்மனை 4

வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன் அத்தையுடன் (கோவை சரளா) வசித்து வருகிறார். குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட தன் தங்கை செல்வி (தமன்னாவும்) தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இதனால், தன் அத்தையுடன் தமன்னாவின் ‘அரண்மனை’ வீட்டுக்குச் செல்கிறார் சுந்தர்.சி. தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் அவர், அந்த வீட்டில் இன்னொரு உயிர் போக இருப்பதை அறிகிறார். அந்த உயிரைக் கொல்லத் துடிக்கும் தீயசக்தி எது, அது ஏன் கொல்லத் துடிக்கிறது? அந்த உயிரைக் காப்பாற்ற சுந்தர்.சி என்ன செய்கிறார் என்பது கதை.

மூவரைக் கொன்று தன் பலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பும் தீயசக்திக்கும், அப்படிக் கொல்ல முயற்சிக்கும்போது தன் உயிரை இழக்கும் தாயின் நல் ஆத்மாவுக்கும் இடையேயான போராட்டம்தான் படத்துக்கான கரு. இயன்றவரை அதை தன் பாணியில் வேகமாகப் படமாக்கி இருக்கிறார் சுந்தர்.சி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts