Skip to main content

Featured

நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குநர் ரஞ்சித்

சென்னை: சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரையை இயக்குநர் ரஞ்சித் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை சாதிய வன்கொடுமை காரணமாக சகமாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் 2 பயின்று வந்த மாணவர் சின்னத்துரைக்கு அவரது ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு சென்று பாடங்களை கற்றுக் கொடுத்தனர். பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த சின்னதுரை, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts