Skip to main content

Featured

“சட்டத்தால் மட்டும் சாதியக் கொலைகளை தடுத்துவிட முடியாது” - இயக்குநர் மாரி செல்வராஜ்

தூத்துக்குடி: “நாம் சாதாரணமாக சொல்கிறோம். உடனே ஒரு சட்டம் போட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று சொல்கிறோம். அப்படியில்லை. உளவியலாக சாதி மிகவும் கெட்டிப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அரசியல், கலை என அனைத்து தளத்திலும் இணைந்து வேலை பார்த்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்சம் புரிதல் பெறும்” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்ளைச் சந்தித்த மாரி செல்வராஜிடம் “ஓடிடியால் திரையரங்கில் வந்து படங்களைப் பார்க்கும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதா?” என்று கேட்டதற்கு, “எல்லோர் வீட்டிலும் சாமி படம் உள்ளது. பூஜை அறை உள்ளது. ஆனாலும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது குறையவில்லை தானே. அப்படித்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts