Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாவித்திரிக்காக காத்திருந்த ‘வடிவுக்கு வளைகாப்பு’!

‘நால்வர்’ (1953) என்ற தனது நாடகத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன். அந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘நல்ல இடத்து சம்மந்தம்’, ‘பெற்ற மகளை விற்ற அன்னை’ உட்பட பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய இவர், ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ உட்பட பல மறக்க முடியாத படங்களை இயக்கியவர்.

இந்த ஏ.பி.நாகராஜன் இயக்குநராக அறிமுகமான படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் மூலம் இதை தயாரிக்கவும் செய்தார். நண்பர்களான இருவரும் ஏற்கெனவே ‘மக்களைப் பெற்ற மகராசி’யை தயாரித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments