Altuzarra Taps Marta Lastra as Chief Executive Officer
She has served as president of the company since January 2025. from Fashion

‘நால்வர்’ (1953) என்ற தனது நாடகத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன். அந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘நல்ல இடத்து சம்மந்தம்’, ‘பெற்ற மகளை விற்ற அன்னை’ உட்பட பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய இவர், ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ உட்பட பல மறக்க முடியாத படங்களை இயக்கியவர்.
இந்த ஏ.பி.நாகராஜன் இயக்குநராக அறிமுகமான படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் மூலம் இதை தயாரிக்கவும் செய்தார். நண்பர்களான இருவரும் ஏற்கெனவே ‘மக்களைப் பெற்ற மகராசி’யை தயாரித்திருந்தனர்.
Comments
Post a Comment