Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘போட்’ படத்துலயும் காமெடி, ஃபேன்டஸி இருக்கு! - இயக்குநர் சிம்புதேவன் நேர்காணல்

காமெடி, ஃபேன்டஸி படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அவரது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பலருக்கு ‘ஆல் டைம் பேவரைட்’. சுதந்திரத்துக்கு முந்தைய சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு அவர் இப்போது உருவாக்கி இருக்கும் படம், ‘போட்’. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இதில், கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாம்ஸ் உட்பட பலர் நடித்திருக்கிறார் கள். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படம் பற்றி சிம்பு தேவனிடம் பேசினோம். ‘போட்’ என்ன சொல்லப் போகிறது?

சின்ன வயசுல எனக்கு கிடைச்ச இன்ஸ்பிரேஷன்தான் இந்தப் படம் பண்ண காரணம். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’,அப்புறம் ‘கடல்புறா’ மாதிரி கடல் தொடர்பான நிறைய நாவல்களை வாசிச்சிருக்கேன். அதுதொடர்பான திரைப்படங்களையும் பார்த்திருக்கேன். அந்த இன்ஸ்பிரேஷன்ல கடலைப் பின்னணியா வச்சு ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். சில நண்பர்கள்கிட்ட அதுபற்றி பேசும்போது ஒருத்தர், அவங்க தாத்தாவுக்கு தாத்தா பற்றி ஒரு விஷயம் சொன்னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments