Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனுஷ் குறித்து பிரகாஷ் ராஜ் பெருமிதம் முதல் செல்வராகவன் பகிர்வு வரை @ ‘ராயன்’ இசை நிகழ்வு

சென்னை: “தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

தனுஷ் தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், “10 கிலோ சதை, 15 கிலோ எழும்ப வைச்சு துள்ளிட்டு இருக்க என்று நான் ஒரு படத்தில் வசனம் பேசியிருந்தேன். அவர் இன்னும் துள்ளிட்டுதான் இருக்காரு. அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார். ராயன் திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும். அதற்காக படக்குழு மிகுந்த முயற்சி எடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக தனுஷின் வசனங்கள் படத்தில் மாஸாக இருக்கும்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments