Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“திமுகவுக்குத்தான் வாக்களித்தேன். ஆனால்…” - ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பா.ரஞ்சித் 

சென்னை: “இது ஒரு எச்சரிக்கை தான். மக்கள் பிரச்சினை சரியாக வேண்டும் என்பதற்காக நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன். ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாடகர் அறிவு எழுதி இசையமைத்துள்ள ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியிட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்திடம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நடக்கவுள்ள பேரணி குறித்து கேட்டதற்கு, “தீர்வை நோக்கி நகர்வதற்கான உந்துதலை, விழிப்புணர்வை அந்த பேரணி உருவாக்கும் என நான் நினைக்கிறேன். சட்ட ரீதியாக சரியாக விசாரித்து, சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதன் பின்னணியில் இந்த குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments