
நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, தனுஷுடன் ‘குபேரா’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரைப்படத் துறையில் பல நிராகரிப்புகளைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "ஆரம்ப காலத்தில் நடிகைக்கான முகம் எனக்கு இல்லை என்று நிராகரித்தார்கள். ஆடிஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது கண்ணீருடன் தான் வருவேன். 20, 25 படங்களுக்கான ஆடிஷன்களில் நிராகரிக்கப் பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயன்றேன். ஒரு படத்துக்கான ஆடிஷனுக்கு பலமுறை சென்றேன். கடைசியாகவே தேர்வு செய்தார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment