
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் தனுஷ் பட பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் பேசி முடிவுக்குக் வர வேண்டும். அதற்குப் பிறகே புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் விஷால் மற்றும் தனுஷுக்கு ரெட் கார்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருப்பவர் தேனாண்டாள் பிக்சர்ஸ் முரளி. இவருடைய தயாரிப்பில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் புதிய படமொன்று தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு நிறுத்தப்பட்டது. சில படங்களின் தோல்வியால் தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்காமல் நிறுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment