Skip to main content

Featured

“யோகிபாபு தங்கமான மனிதர்” - விஜய் சேதுபதி புகழாரம்

யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாயாவதி: மருதகாசி பாடலாசிரியராக அறிமுகமான படம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளம், மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் அதிபர் டி.ஆர்.சுந்தரம், 30 வருடங்களுக்குள் 100 படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தவர். அவரது 100-வது தயாரிப்பான ‘கொஞ்சும் குமரி’யை 1963-ம் ஆண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது காலமானார். அந்தப் படத்தில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளையும் தனி ரீலாக சேர்த்திருந்தார்கள்.

வருடத்துக்கு 3 படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது டி.ஆர்.சுந்தரத்தின் விருப்பம். இதனாலேயே தனது ஸ்டூடியோவில் ரெடிமேட் அரங்குகளை அமைத்திருந்தார். அதைச் சிறிதாக மாற்றினால் போதும். மற்றப் படங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் அவர் அறியப்பட்டாலும் கணபதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலும் படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று, ‘மாயாவதி’.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments