Skip to main content

Featured

பேச்சி - சினிமா விமர்சனம்

காயத்ரி, தேவ், ஜனா, ப்ரீத்தி, மகேஷ் ஆகிய நண்பர்கள் ‘ட்ரெக்கிங்’ செல்வதற்காகக் கொல்லிமலைக்கு வருகிறார்கள். வனக்காவலர் பால சரவணன் அவர்களுக்கு வழிகாட்டியாக வருகிறார். திடீரென, பாலசரவணின் எதிர்ப்பை மீறி, காட்டில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் அவர்கள், பேச்சியிடம் சிக்குகிறார்கள். யார் அந்தப் பேச்சி? அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பது கதை.

மலையேற்றம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமாக ‘ட்ரெக்கிங்’ செல்வது, ஐவர் குழுவில் ஒளிப்பட ஆர்வலனாக இருக்கும் மகேஷை மற்ற இருவர், அளவுக்கு மீறிக் கிண்டல் செய்வது, வனக் காவலரின் அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்வது எனப் படத்தின் முதல் 20 நிமிடங்கள் மெல்ல நகர்ந்தாலும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததும் பேச்சிக்கும் மலையேற்றக் குழுவுக்குமான ஆடுபுலி ஆட்டம் தொடங்கி, ஒவ்வொரு காட்சியும் கதி கலங்க வைக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments