Skip to main content

Featured

“யோகிபாபு தங்கமான மனிதர்” - விஜய் சேதுபதி புகழாரம்

யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரை விமர்சனம்: சாலா

சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் நீண்ட காலமாக மூடப்பட்டுக் கிடக்கிறது ‘பார்வதி பார்’. அதை மீண்டும் திறக்க அரசு ஏல அறிவிப்பு செய்கிறது. அதைக் கைப்பற்றுவதில், ஆள்பலம், அரசியல் செல்வாக்குடன் அப்பகுதியில் வலம் வரும் குணா - தங்கதுரை ஆகிய இரண்டு தாதாக்கள் குழு கடுமையாக மோதிக் கொள்கிறது.

இதற்கிடையில் பள்ளி ஆசிரியரான புனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவுடன் அந்த மதுக்கூடத்துக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார். குணாவின் தம்பியான சாலா (தீரன்), ரத்தக் களரிகளுக்கு நடுவே, பார்வதி பாரை ஏலம் எடுக்கிறார். அவரால் அதை நடத்த முடிந்ததா, இல்லையா என்பது கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments