Skip to main content

Featured

திரை விமர்சனம்: மின்மினி

ஊட்டியில் ஒரு கான்வென்ட் பள்ளியில் கால்பந்து சாம்பியனாகவும் கொண்டாடப்படுபவனாகவும் திகழ்கிறான் பாரி (கவுரவ் காளை}. அதே பள்ளியில் படிக்கும் சபரி (பிரவீன் கிஷோர்) ஓவியம், செஸ் என கலைத் திறன்களில் சிறந்து விளங்குகிறான். சபரியை வம்புக்கிழுத்துக் வெறுப்பேற்றுகிறான் பாரி. ஒரு கட்டத்தில் இருவருக்கும் நட்பு உருவாகிறது. அதை வெளிப்படுத்தும் முன், விபத்தில் மூளைச் சாவு அடைகிறான் பாரி.

அவனின் இதயம் பொருத்தப்படுவதால் உயிர் பிழைக்கும் பிரவீனா (எஸ்தர் அனில்), பாரி படித்த அதே பள்ளியில் சேர்ந்து அவனின் மரணத்தால் துயரத்தில் உழலும் சபரிக்கு உதவ முயல்கிறாள். ஆனால் சபரி, பள்ளியை விட்டு சென்று விடுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் பைக் பயணம் செய்து கொண்டிருக்கும் சபரியை பின்தொடர்கிறாள் பிரவீனா. இந்தப் பயணத்தில் இருவருக்கும் நேரும் அனுபவங்கள்தான் மீதிக் கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts