Skip to main content

Featured

24 மணி நேரமும் படங்களை திரையிட அனுமதி தேவை - தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள்: தயாரிப்பாளர்களுடன் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை ஓடிடியில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts