Noir Kei Ninomiya Fall 2025 Ready-to-Wear: Beyond the Spectrum
Black light brought out a profusion of otherworldly colors in a lineup that telegraphed a joyful, wonder-filled exploration of the unknown. from Fashion
மதுரை: எல்லா இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது: “மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக ஹேமா கமிட்டி 2017-ல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதை ஹேமா கமிட்டி உறுதி செய்துள்ளது. அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை. பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. கேரவனில் கேமரா வைக்கிற சம்பவங்கள் கூட நடக்கிறது என்று சொல்கிறார்கள். இது என் மனைவி புதிதாக சொன்னதல்ல. ஹேமா கமிட்டியிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment