Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவகார்த்திகேயன் தம்பியாக நடிக்கிறார் அதர்வா?

இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் 'புறநானூறு' என்ற படத்தை இயக்க இருந்தார். இதில் விஜய் வர்மா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படம் டிராப் ஆனதை அடுத்து அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்குகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்குத் தம்பியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விலகிவிட்டார். அந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடிப்பதாகவும் படப் பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments