Skip to main content

Featured

நடிகை சித்ரா மரணம்: கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி்த்ராவின் தந்தை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், ஹேம்நாத் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த சித்ராகடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts