
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ படங்களின் 2-ம் பாகங்கள் எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குநர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் பல்வேறு படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஆனால், சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘புதுப்பேட்டை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எப்போது என்ற கேள்வியே அதிகமாக இருக்கும். அது குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அதில், “கண்டிப்பாக ’புதுப்பேட்டை 2’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வர வேண்டும். அனைவரையும் ஓர் ஆண்டு படப்பிடிப்புக்கு இணைப்பது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு படத்துக்கு ஓர் ஆண்டு இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதுள்ள காலத்துக்கு ஏற்றவகையில் எழுத்தும் மாற வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment