Skip to main content

Featured

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்பெயின் நாட்டு பண்ணையில் பணிபுரியும் மோகன்லால் மகன் பிரணவ்!

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணையில் சம்பளம் ஏதுமின்றி பணி செய்து வருகிறார் என அவரது அம்மா சுசித்ரா மோகன்லால் தெரிவித்துள்ளார். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் பகிர்ந்திருந்தார்.

“பிரணவ் (அப்பு), இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. அதற்கு பதிலாக அங்கு தங்குவதற்கு இடமும், உணவும் பெறுகிறார். சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments