Skip to main content

Featured

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி முகமூடி அணிந்து வருகிறார்: தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு புகார்

நடிகர் தனுஷ் போலி முகமூடி அணிந்து வலம் வருகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா பின்புலம் எதுவுமில்லாமல் திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல்’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலவிரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments