Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

படப்பிடிப்பில் தவறாக நடந்த ஹீரோ: குஷ்பு புகார்

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கடந்த 20-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவின் ஒரு பகுதியாக, சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகைகள் பூமி பட்னேகர், சுகாசினி மணிரத்னம், வாணி திரிபாதி ஆகியோருடன் குஷ்புவும் கலந்து கொண்டார். திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து குஷ்புவிடம் கேட்கப்பட்டது.

அவர் கூறும்போது, “திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், யாரோ ஒருவர் தங்களைத் தவறாக நடத்துவதாக உணரும்போது, அதைப் பற்றி வெளிப்படையாக அவர்கள் பேச முன்வர வேண்டும். நான் சினிமாவில் அறிமுகமான கால கட்டத்தில், படப்பிடிப்பின்போது ஒரு ஹீரோ என்னிடம் தவறான நோக்கத்துடன் ‘யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments