
சென்னை: ‘அமரன்’ திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் மறைக்கப்பட்டதாக எழுந்த விவாதத்துக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று (நவ.04) நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது: “தமிழ்நாட்டில் வாழும் தமிழ் ரசிகர்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழும் உலகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, ஒரு கதையை நேர்மையாகவும், ஈடுபாட்டோடும் கொடுத்தால் அதை மிகப்பெரிய வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்குறது. அடுத்தடுத்து இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment