Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சவுபின் சாஹிருக்கு போலீஸ் சம்மன்

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற மலையாள படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றது. இதைப் பரவா பிலிம்ஸ் சார்பில் நடிகர் சவுபின் சாஹிர், பாபு சாஹிர், ஷான் ஆண்டனி இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் லாபத்தில் 40 சதவிகித பங்கு தருவதாகக் கூறி, தரவில்லை என்றும் சிராஜ் என்பவர் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், நிதி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் கருப்புப் பணம் முதலீடு செய்யப் பட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அவர்களும் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments