Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எம்.ஜி.ஆருக்கு ஏன் ‘பெற்றால்தான் பிள்ளையா’ பிடிக்கும்?

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு அவர் நடித்திருக்கும் அனைத்துப் படங்களுமே பிடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்து அவருக்கு அதிகம் பிடித்த படங்களில் ஒன்று ‘பெற்றால்தான் பிள்ளையா’. இதை அவரே சொல்லியிருக்கிறார். சார்லி சாப்ளினின் ‘த கிட்’ படப்பாதிப்பில் உருவான படம் இது.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் சேர்த்து எடுத்தார்கள். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, தங்கவேலு என பலர் நடித்தனர். திரைக்கதை வசனத்தை ஆரூர் தாஸ் எழுதினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments