Skip to main content

Featured

சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பெப்சி’க்கு எதிராக புதிய அமைப்பு: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்​கும் தென்​னிந்​திய திரைப்பட தொழிலா​ளர்​கள் சம்​மேளன​மான ‘பெப்​சி’க்கும் கடந்த சில மாதங்​களாக மோதல் போக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து பெப்சி அமைப்​பு, நடப்பு தயாரிப்​பாளர் சங்​கத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்​நிலை​யில் ‘பெப்​சி’ க்கு எதி​ராக புதிய திரைப்​படத் தொழிலா​ளர்​கள் அமைப்​பை, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கம் தொடங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தயாரிப்​பாளர் சங்​கத் தலை​வர் முரளி என் ராம​சாமி, பொதுச் செய​லா​ளர்​கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் கூறிய​தாவது: தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று நடந்​தது. எங்​கள் சங்​க​மும் பெப்சி அமைப்​பும் சுமார் 50 வருடங்​களாகத் தொழில் ஒத்​துழைப்​பில் ஈடு​பட்டு வந்​தோம். சில காரணங்​களால் அவர்​கள் எங்​கள் சங்​கத்​துக்கு ஒத்​துழைப்பு தரு​வ​தில்லை என்று கூறி நடப்​புத் தயாரிப்பு சங்​கத்​துடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளார்​கள். நாங்​கள் பலமுறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் அவர்​கள் அதற்கு உடன்​பட​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments