
சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை முதலில் சொன்ன ஹீரோ அதர்வா தான். நான் அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதர்வா நடிக்கவில்லை என்றதும் மிகவும் வருத்தப்பட்டேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டி என் ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment