
திரைத்துறைக்கு வந்த புதிதில் தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகை இஷா கோபிகர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், “தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தேன். இது நான் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம். நான் படப்பிடிப்பில் இருந்தபோது, நிறைய நடனம் ஆட வேண்டி இருந்தது. தென்னிந்திய நடனங்கள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அவை எளிதானவை அல்ல. ஆனால் எனது முதல் படத்தில், என் நடன இயக்குனர் எல்லோர் முன்னிலையிலும் என்னிடம், ‘இந்தப் பெண்கள் பாலிவுட்டிலிருந்து வருகிறார்கள், ஏன் இவர்களை அழைத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை’ என்று கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment