Skip to main content

Featured

அப்பா தந்த பயிற்சி... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 2

நான், ​நாகப்பட்டினம் தேசிய ஆரம்​பப்​பள்​ளி​யில் படித்த காலங்​களில் டெக்​னாலஜி அதி​க​மாக வளர்ச்​சி​யடைய​வில்​லை. இப்​போ​திருப்​பது போல, எல்​.கே.ஜி. யூ.கே.ஜி வகுப்​பு​களும் அப்​போது கிடை​யாது. ஒன்​றாம் வகுப்​பிலிருந்​து​தான் படிப்பை தொடங்க வேண்​டும். 1962-ம் ஆண்டு நான் ஒன்​றாம் வகுப்பு படித்​துக் கொண்​டிருந்​தேன். அந்த வயதில் சின்​னப்​பிள்​ளை​களுக்கு என்ன சேட்​டை, விளை​யாட்​டுத்​தனம் இருக்​குமோ, அது அனைத்​தும் எனக்​கும் இருந்​தது. ஆனால் கூடவே பயமும் அதி​க​மாக இருக்​கும்.

வழக்​கம் போல பள்​ளிக்​குச் சென்று கொண்​டிருந்​தேன்! அப்​போது இந்​தியா மீது சீனா, போர் தொடுக்​கப்​போகிறது என்ற செய்தி ஊரில் பரவி இருந்​தது. ‘அந்த போர் பாதிப்பு நாகப்​பட்​டினத்​துக்​கும் ஏற்​படும்; இங்​கும் குண்டு போடு​வார்​கள்’ என்று யாரோ ஒரு​வர் சொன்​னது காட்​டுத் தீயாகி இருந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments