Featured
- Get link
- X
- Other Apps
நீர்க்குமிழி: கே.பாலசந்தருக்கு சென்டிமென்ட் பயம் காட்டிய நண்பர்கள்!

மனித உறவுகளின் ஆழமானச் சிக்கல்களையும் சமூகப் பிரச்சினைகளையும் தனது படங்களின் மூலம் தைரியமாகவும் அழுத்தமாகவும் பேசிய கே.பாலசந்தர், இயக்குநராக அறிமுகமான படம், ‘நீர்க்குமிழி’. எம்.ஜி.ஆரின் ‘தெய்வத்தாய்’ படம் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகமான கே.பாலசந்தருக்கு இயக்குநராக இந்த முதல் படம் தந்த வெற்றிதான், அவரை உச்சிக்குக் கொண்டு சென்றது.
‘நீர்க்குமிழி’ நாடகத்தை எழுதிய கே.பாலசந்தரை, தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.கே.வேலன் சந்தித்தார். அவரை கே.பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியது, அவர் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்த வி.குமார். ‘நீர்க்குமிழி’ கதையை கேட்ட அவர், நாடக அரங்கேற்றத்துக்கு முன்பே, சினிமாவாக்கலாம் என்றார். அதோடு படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்றும் சொன்னார், கே.பி.யிடம். ‘எனக்கு தொழில்நுட்பம் தெரியாது. திரை நுணுக்கங்கள் தெரியாது, பயமாக இருக்கிறது. திரைக்கதை, வசனம் மட்டும் எழுதி தருகிறேன். நீங்களே டைரக் ஷன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் கே.பி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment