Skip to main content

Featured

பில்ஹானா: மாடர்ன் தியேட்டர்ஸ் கைவிட்ட காதல் கதையில் 2 படங்கள்

தமிழ் சினிமாவின் ஆரம்பக்கட்டத்தில் புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றைப் படமாக்க இயக்குநர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். ஒரே கதையை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் படமாக்கியதும் நடந்திருக்கிறது. பதிப்புரிமை இல்லாததால் ஒரே கதையை இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரித்து, அதை ஒரே நேரத்தில் வெளியிடப் போட்டியும் நடைபெற்றிருக்கிறது. அப்படி போட்டியில் உருவான படங்களில் ஒன்று, ‘பில்ஹணா’. காஷ்மீர் கவிஞரான இவர் கதையை கொண்டு ஒரே நேரத்தில் 2 படங்கள் தமிழில் உருவாகின.

அக்காலகட்ட பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ், எம்.கே. தியாகராஜ பாகவதரை ஹீரோவாக்கி, ‘பில்ஹணன்’ கதையைப் படமாக்க இருப்பதாக விளம்பரம் வெளியிட்டது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டதால் அந்தப் படம் டிராப் ஆனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments